Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்கார்கிவ் காவல்துறை அலுவலகம் மீது அதிபயங்கரத் தாக்குதல்

கார்கிவ் காவல்துறை அலுவலகம் மீது அதிபயங்கரத் தாக்குதல்

யுக்ரைன் காவல்துறை அலுவலகம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன.

சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏழாவது நாளாக தொடரும் யுக்ரைன் – ரஷ்ய போரில் யுக்ரைன் கீவ் நகரிலுள்ள தொலைக்காட்சி சமிக்ஞை கோபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதலையும், ஏவுகணைகள் மூலம் வான் வழித் தாக்குதலையும் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

அதேபோன்று கார்கிவ் நகரில் யுக்ரைன் காவல்துறை அலுவலகம் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

குறித்த ஏவுகணை தாக்குதலால் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles