Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் சுகாதார சேவையாளர்கள்!

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் சுகாதார சேவையாளர்கள்!

வேதன பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின்போது எட்டப்பட்ட தீர்மானங்கள், இதுவரையில் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், நாளை (02) முதல் 2 நாட்களுக்குத் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகச் சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles