Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 14 ஆம் திகதி வரையான எட்டு மாத காலப்பகுதிக்குள் 1.8 மில்லியன் பெற்றோல் பீப்பாய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், அதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த நீண்டகால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் M/s OQ Trading Limited க்கு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Keep exploring...

Related Articles