Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடருந்து சேவைகள் பாதிப்பு?

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடருந்து சேவைகள் பாதிப்பு?

தொடருந்துகளுக்காக எதிர்வரும் 3 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் தொடருந்து சேவைகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, சில மட்டுப்படுத்தல்களுடன் தொடருந்து சேவைகளை முன்னெடுக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடருந்து சேவைகளை முன்னெடுக்கத் தேவையான எரிபொருள் பெற்றுத் தரப்படும் என கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் தொடருந்து சேவைகள் தடைப்படக்கூடும் என தொடருந்து இயந்திர சங்கம் தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles