Wednesday, April 2, 2025
28 C
Colombo

உள்நாட்டு

2024 இல் கண்டி அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

March 1, 2022 - 11:28amஉள்நாடு90 வீதமான காணி சுவீகரிப்பு நிறைவு கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என  ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். னந்தாராம  விகாராதிபதி தெனிகே  சிறினிவாச ஆனந்த தேரருக்கு தர்மகீர்த்தி கௌரவ நாமத்துடன் சன்னஸ்கோரள மகாதிசா உபபிரதான பீடாதிபதியாக நியமிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 2014நவம்பரில் குருநாகல் தம்புள்ளை கலகெதரவில் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி   நாட்டினார் . இதற்கான  அனைத்து ஒப்பந்தங்களையும் வழங்கியதுடன் அவர் தோல்வியடைந்ததையடுத்துவுன்  அவை ரத்துச் செய்யப்பட்டன. அதை ரத்து செய்யாமல் இருந்திருந்தால் 2018இல் கடந்த  அரசினாலேயே இதனை   திறந்து வைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் பழிவாங்கல் செய்ததால்  அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.  2017ஆம் ஆண்டு கடவத்தை முதல் மீரிகம வரையும் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையும் 1, 2என இரண்டு பிரிவுகளை  கடந்த அரசு ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் கடவத்தையில் இருந்து மீரிகம  வரையான நிர்மாணப் பணிகளை முதலாவதாக வழங்கியது. எமது அரசு ஆட்சிக்கு ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டளவில் 36பில்லியன் ரூபாவை   60நாட்களுக்குள்  வழங்கினார்.    என்னால் முடிந்தவரை விரைவாக இதைச் செய்ய நான் கடுமையாக உழைக்கிறேன்.   இந்த நெடுஞ்சாலை விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் குறிப்பிட்ட நாளில்  நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம்  உத்தரவிட்டது.  அதனால்   40கி.மீ., தூரத்தை  நிறைவு செய்து அதனை  திறக்க முடிந்தது. பிரதமரின் தலைமையில் பொதுஹெர தொடக்கம் ரம்புக்கனை வரை நெடுஞ்சாலைத் திணைக்களத்தின் ஊடாக நேரடி ஒப்பந்தங்களை வழங்கி  பணிகளை ஆரம்பித்தோம். இப்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் திருடுவதாக  பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. மீதி இருபது கிலோமீட்டர்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என நம்புகிறேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்தரவின் பேரில் கண்டிக்கான நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணிகள்  2024ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக இதை செய்து முடிப்போம். நிச்சயமாக நாங்கள் அதை  செய்வோம். கோவிட் கோவிட் என்று கூறி நாங்கள் எந்த  அபிவிருத்தி  செயல்பாடுகளை  நிறுத்தவில்லை 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உத்தரவின்படி,  இந்த அதிவேகப் பாதையை நிறைவு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொண்ணூறு சதவீத  காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  அவற்றுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் பத்து சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் முடிவடையும் என்றார். Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 1, 2022 - 6:00amஉள்நாடுஜனாதிபதி அக்கறையாக உள்ளதாக டக்‌ளஸ் தெரிவிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றங்கள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய கடற்றொழிலாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியினாலும், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளாலும் மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிகளினால் கடற்றொழில் செயற்பாடுகள் பாதிப்படையக் கூடாது என்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனமாக உள்ளார். இந்த நெருக்கடிகளில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.       Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

நான்காவது டோஸ் குறித்து இன்னமும் தீர்மானமில்லை

March 1, 2022 - 6:00amஉள்நாடுமூன்றாவது டோஸ் நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும் இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால் 3 ஆவது டோஸ் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் செயல்முறை விரைவுபடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். பூஸ்டர் டோஸிற்கான கொள்முதல் உத்தரவை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறதா என வினவிய போது, அதிக ஆபத்துள்ள குழுவின் கீழ்வரும் அனைத்து இலங்கையர்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவதே அரசாங்கத்தின் இப்போதைய இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். தொற்று நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் மரணமடைவதையும் தடுக்கும் ஒரே வழி இலங்கையர்களிடையே பூஸ்டர் டோஸ் அல்லது 3ஆவது டோஸ் கொண்ட மெதுவான முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்தார். முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 168,96,733 பேரில் 71,39,133 கொவிட் 19 நோயாளிகளுக்கு மாத்திரமே பூஸ்டர் டோஸ் மூலம் தடுப்பூசி வழங்கப்பட்டது. அது திருப்திகரமாக இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றாத மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரமான வைரஸ் தொற்றுக்கு எதிராக தங்கள் அமைப்பை அமைக்க 3 வது டோஸ் அவசியம் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்னும் நான்காவது டோஸை பரிந்துரைக்க உள்ள போதிலும், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். “30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும் சரியான நேரத்தில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களைப் பெற்றால், எதிர்வரும் மாதங்களில் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

விசேட ஜனாதிபதி விசாரணை ஆ.கு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

March 1, 2022 - 6:00amஉள்நாடுராஜித, பொன்சேகா, ரஞ்சனிடம் நேற்று வாக்குமூலம் பதிவு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இரண்டாவது மாடியில் மேற்படி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நேற்று முற்பகல் முதல் ஆரம்பமாகின. நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்கியிருந்தனர். அதை வேளை தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் சிறைச்சாலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மேற்படி ஆணைக்குழுவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டிருந்தார். அதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித்த ஜயசுந்தர, மற்றும் என்.கே. இலங்கக்கோன் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரும் நேற்றைய தினம் மேற்படி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஊழலுக்கு எதிரான குழு மற்றும் அதன் செயலகம் மூலம் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து தகவல்களை பெற்றுக்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் பொருத்தமான பரிந்துரைகளை முன் வைப்பதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க ஜயவர்தன,ஹேமா குமுதினி விக்ரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.(ஸ)   லோரன்ஸ் செல்வநாயகம் Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை

March 1, 2022 - 6:00amஉள்நாடுகொள்வனவு செய்யவுள்ள எரிபொருள் குறித்த திகதியில் நாட்டை வந்தடையும்   வழமையை விட அதிகளவு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ள நிலையிலும் நாடு முழுவதும் எரிபொருளுக்கான வாகன வரிசையை காண முடிவதாக வலு சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதத்தில் ஐ.ஓ.சி. நிறுவனம் இரு தடவைகள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களுக்கு அணி திரள்வது அதிகரித்துள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் மற்றும் அதற்கான விலையதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் தமது வாகனங்களின் எரிபொருள் தாங்கியை நிரப்பிக் கொள்வதில் மும்முரமாக செயற்படுவதாலேயே நீண்ட வரிசையை காண முடிகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சிலர் எரிபொருளை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் இது அறுவடைக் காலம் என்பதால் இயந்திர உபகரணங்களுக்காக பெருமளவில் எரிபொருளை உபயோகிப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொள்வனவு செய்யப்படவுள்ள எரிபொருள் எந்தவித தாமதமும் இன்றி குறித்த திகதியில் நாட்டை வந்தடையும் என குறிப்பிட்டுள்ள அவர். அதற்காக செலுத்தவேண்டிய டொலர்களை விடுவித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பொது போக்குவரத்து களுக்காக எரிபொருளை வழங்குவதில் எந்த சிக்கல்களும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றும் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் வரிசையில் நின்றதாக அறிய வருகிறது. இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலை ஏற்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலே எரிபொருள் விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.   லோரன்ஸ் செல்வநாயகம் Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

Popular

Latest in News