கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...
March 2, 2022 - 6:00amஉள்நாடுவெளிவிவகார அமைச்சு நடவடிக்கை
உக்ரைனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டமைச்சு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. இந்த நோக்கத்துக்காக, உக்ரைனிலுள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் - போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது.
இந்த செயன்முறைக்கு வோர்சோ மற்றும் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் வசதியளிக்கப்பட்டு வருவதுடன், அங்காராவிலுள்ள தூதரகம் உக்ரைனுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
வெளியேற்றும் செயன்முறையை திறம்பட எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, வோர்சோவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வளங்களை வழங்கும் பணியை அமைச்சு பலப்படுத்தியுள்ளது. உக்ரைனை விட்டு வெளியேறும் இலங்கைப் பிரஜைகளுடன் அங்காரா மற்றும் வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கும் வழிவகை செய்கின்றனர்.
உகரைனுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலைமையைக் கண்காணிப்பதிலும் வெளிநாட்டமைச்சு ஈடுபட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட கௌரவத் தூதுவர்கள் மற்றும் இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர்.
பெலாரஸிலுள்ள எட்டு (08) பல்கலைக்கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் 1,556 மாணவர்கள் உட்பட, ஏறத்தாழ 1,600 இலங்கைப் பிரஜைகளுடன் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றது. இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர் மற்றும் பெற்றோர் குழுக்கள் மற்றும் பெலாரஸில் உள்ள ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதுவர் நேரடித் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். அவசியமான சந்தப்பங்களில், வழக்கமான நிலைதொடர்பில் புதிய தகவல்கள் பெற்றோருக்கு வழங்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிக் கொள்ளுமாறு பிராந்தியத்திலுள்ள இலங்கைப் பிரஜைகளை அமைச்சு கேட்டுள்ளது.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No
Share
March 2, 2022 - 7:54amஉள்நாடுதிருகோணமலை - உவர்மலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் எனும் 15 வயது சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மற்றைய இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே இடத்தைச் சேர்ந்த டி.டபிள்யூ. திசறு அமீக்ஷண எனும் 20வயது சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல் சலாம் யாசீம்)
lead
Tags: விபத்துபலிசிறுவன் பலிமரணம்உவர்மலைதிருகோணமலைAccidentMotorcycleDeadDeathBoy DeadUvarmalaiTrincomaleeSend Push Notification: No
Share
March 2, 2022 - 6:00amஉள்நாடுரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் - ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்து பெலாரஸ் படைகள் தாக்குவதாக உக்ரைன் பாராளுமன்ற அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேற்று 06ஆவது நாளாக தொடர்ந்து வருவதுடன், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.
ஏற்கனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷ்ய இராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷ்யப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றன.
இதேவேளை ரஷ்யத் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாட்டின் படைகள் உக்ரைனின் வடக்குப் பகுதி வழியாக நுழைந்தே தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் உக்ரைன் மீதான போர் தொடருமென ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி நேற்று வெளியிட்ட செய்தியில்,
உக்ரைன் மீதான தாக்குதலிலிருந்து ரஷ்ய இராணுவம் பின்வாங்கப் போவதில்லை. மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலிலிருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும். மேலும், ஐரோப்பாவிலிருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் மீது ரஷிய இராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருவதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய இராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளிக்கிடையே நேற்றுமுன்தினம் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் நேற்று ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைனுக்குள் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No
Share