Friday, September 20, 2024
31 C
Colombo

உள்நாட்டு

விசேட ஜனாதிபதி விசாரணை ஆ.கு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

March 1, 2022 - 6:00amஉள்நாடுராஜித, பொன்சேகா, ரஞ்சனிடம் நேற்று வாக்குமூலம் பதிவு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இரண்டாவது மாடியில் மேற்படி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நேற்று முற்பகல் முதல் ஆரம்பமாகின. நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்கியிருந்தனர். அதை வேளை தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் சிறைச்சாலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மேற்படி ஆணைக்குழுவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டிருந்தார். அதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித்த ஜயசுந்தர, மற்றும் என்.கே. இலங்கக்கோன் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரும் நேற்றைய தினம் மேற்படி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஊழலுக்கு எதிரான குழு மற்றும் அதன் செயலகம் மூலம் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து தகவல்களை பெற்றுக்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் பொருத்தமான பரிந்துரைகளை முன் வைப்பதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க ஜயவர்தன,ஹேமா குமுதினி விக்ரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.(ஸ)   லோரன்ஸ் செல்வநாயகம் Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை

March 1, 2022 - 6:00amஉள்நாடுகொள்வனவு செய்யவுள்ள எரிபொருள் குறித்த திகதியில் நாட்டை வந்தடையும்   வழமையை விட அதிகளவு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ள நிலையிலும் நாடு முழுவதும் எரிபொருளுக்கான வாகன வரிசையை காண முடிவதாக வலு சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதத்தில் ஐ.ஓ.சி. நிறுவனம் இரு தடவைகள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களுக்கு அணி திரள்வது அதிகரித்துள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் மற்றும் அதற்கான விலையதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் தமது வாகனங்களின் எரிபொருள் தாங்கியை நிரப்பிக் கொள்வதில் மும்முரமாக செயற்படுவதாலேயே நீண்ட வரிசையை காண முடிகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சிலர் எரிபொருளை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் இது அறுவடைக் காலம் என்பதால் இயந்திர உபகரணங்களுக்காக பெருமளவில் எரிபொருளை உபயோகிப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொள்வனவு செய்யப்படவுள்ள எரிபொருள் எந்தவித தாமதமும் இன்றி குறித்த திகதியில் நாட்டை வந்தடையும் என குறிப்பிட்டுள்ள அவர். அதற்காக செலுத்தவேண்டிய டொலர்களை விடுவித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பொது போக்குவரத்து களுக்காக எரிபொருளை வழங்குவதில் எந்த சிக்கல்களும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றும் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் வரிசையில் நின்றதாக அறிய வருகிறது. இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலை ஏற்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலே எரிபொருள் விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.   லோரன்ஸ் செல்வநாயகம் Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க வேண்டும்

March 1, 2022 - 9:24amஉள்நாடுஅங்கஜன் ராமநாதன் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி  மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் வௌியிட்டுள்ள மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்துக்கள் அனுஷ்டிக்கும் மகத்தான நன்நாளான மகா சிவராத்திரி தினத்தன்று உலகில் சமாதானம் மலர்ந்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டுகிறேன்.   அறிந்தோ- அறியாமலோ செய்த பாவங்களுக்கு விமோசனம் பெற ஈசனுக்கே உரித்தான மகா சிவராத்திரி விரதத்தை இந்துமக்கள் அனுஷ்டித்தால் வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் பெற்று மகிழ்வான வாழ்வு வாழலாம் என்பது புராணங்கள் ஊடாக நாம் அறிந்த உண்மை.   “நமசிவாய” எனும் ஈசனின் மந்திரம் மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி மனிதனை நல்வழிப்படுத்த வல்லது. இந்த நாளில் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து ஒவ்வொருவரும் பிறவிப்பயனை அடைய வேண்டும்.   இந்த உலகில் பிறந்த அனைவருமே பிறப்பால் சமமானவர்கள். சாதி, மத, இன, நிற வெறுபாடுகள் எமக்குள் நாமே வகுத்தவை. இறைவன் அந்த பாகுபாட்டை ஒருபோதும் வகுக்கவில்லை. மதத்தாலோ- இனத்தாலோ உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. மத விழுமியங்களைப் பின்பற்றி உள்ளத்தால் உயர்ந்தவர்களே உண்மையான மனிதர்கள். அவர்களையே இந்த உலகம் போற்றும்.   சிவனுக்குரிய சிறப்பான நாளான மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என வேண்டுகிறேன்.     Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

மேல் மாகாணத்தில் 1,188 பேர் தற்காலிகமாக தங்கியிருப்பு

March 1, 2022 - 9:04amஉள்நாடுதகவல்களை சேகரிக்கும் பணியில் பொலிஸார் மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 123கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 11,188பேரின் தகவல்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மேல் மாகாணத்திற்கு வந்து தங்கியுள்ள தற்காலிக குடியிருப்பாளர்களில் 20 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மாகாணத்தில் உள்ள ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இந்தத் தகவல் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

இரு மாதங்களில் வீதி விபத்துகளில் 457 பேர் உயிரிழப்பு!

March 1, 2022 - 10:26amஉள்நாடுஇவ்வருடத்தின் இரண்டு மாதக் காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 450க்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் 434வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதில் 457 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

Popular

Latest in News