Friday, September 20, 2024
28 C
Colombo

உள்நாட்டு

11,463 ரஷ்யர்கள், 3,993 உக்ரைனியர்களின் வீசா கட்டணமின்றி நீடிப்பு

March 1, 2022 - 10:46amஉள்நாடு- இவ்வார அமைச்சரவையில் 6 தீர்மானங்கள் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடித்க்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கையில் 11,463 ரஷ்யா சுற்றுலாப் பயணிகளும், 3,993 உக்ரைன் சுற்றுலாப் பயணிகளும் தற்போது தங்கியிருக்கின்றனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளால் அவர்களுக்கு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்கள் தோன்றியுள்ளன. அதனால், நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறித்த சுற்றுலாப் பயணிகளின் வீசாவுக்கான காலப்பகுதியை கட்டண அறவீடுகள் இன்றி 2 மாத காலத்திற்கு நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2. சிறுபோக நெற் செய்கைக்கான மியூறேட் ஒஃப் பொட்டாஸ் (பொட்டாசியம் குளோரைட்) உர இறக்குமதிமியூறேட் ஒஃப் பொட்டாஸ் என்பது அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் பசளை வகையாவதுடன், விவசாயிகள் நெற்செய்கைக்கான குடலைப்பருவப் பசளை எனவும் அதனை பயன்படுத்தப்படுத்துகின்றனர். 2022 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் விவசாயிகள் 06 இலட்சம் ஹெக்ரெயார்கள் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், அதற்காக 38,500 மெற்றிக்தொன் மியூறேட் ஒஃப் பொட்டாஸ் பசளை தேவையெனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமுறி பொறிமுறையைப் பின்பற்றி குறித்த பசளையை இறக்குமதி செய்வதற்கும், அரசாங்கத்தின் உரமானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இப்பசளையை விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 3. எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகளை அரச மற்றும் தனியார் பங்குடமை பொறிமுறையின் கீழ் மீண்டும் ஆரம்பித்தல்வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்கு சொந்தமான எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலை அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடங்களை 30 வருட காலப்பகுதிக்கு உள்;ர் முதலீட்டுக் கம்பனியான கொரியன் ஸ்பா பெக்கேஜ் தனியார் கம்பனிக்கு வழங்குவதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த காணியை முறையான வகையில் வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையால் குறித்த அமைச்சரவை தீர்மானத்திற்கமைய செயற்படுவதற்கு இயலுமை கிட்டவில்லை. அத்தொழிற்சாலை அமைந்துள்ள 111 ஏக்கர்கள் 02 றூட் 33 பேர்ச்சர்ஸ் காணியை நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனி மற்றும் கொரியன் ஸ்பா பெக்கேஜ் கம்பனிக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்ட பின்னர், எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச மற்றும் தனியார் பங்குடமை பொறிமுறையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 4. 2021/2022 பெரும்போகத்தில் பசுமை விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்தியமைக்கான மதிப்பீட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்தும் பொறிமுறை2021/022 பெரும்போகத்தில் நெல் விளைச்சல் குறைவால் பாதிப்புக்குள்ளாகிய விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 25 வீதம் நட்டஈட்டை வழங்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை திறைசேரியுடன் கலந்துரையாடி தயாரிப்பதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு கணிப்பீடு செய்யப்படும் நட்ட ஈட்டுத்தொகை, மதிப்பீட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக உயர்ந்தபட்சம் 5 ஏக்கர்களுக்கு வழங்குவதற்கும், சார்பு நிலையிலுள்ள  சிறியளவிலான விவசாயிகள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளுக்கும் ஏற்புடைய வகையிலான மதிப்பீட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான நிதியை, சேதன உர உற்பத்தி மற்றும் விநியோகங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் தானியங்கள், இயற்கை வேளாண் உணவு, மரக்கறி, பழவகை, மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிரிடல் ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழிநுட்ப விவசாய இராஜாங்க அமைச்சின் மூலம் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 5. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிடல் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சக்தி கட்டமைப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் கருத்திட்டம் - 04 ஆவது பக்கேஜ்ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிடல் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சக்தி கட்டமைப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் கருத்திட்டம் - 04 ஆவது பக்கேஜ் இன் கீழ் பரிமாற்றல் வழிகள் மற்றும் பகுதிகளைத் திட்டமிடல், விநியோகம் மற்றும் நிறுவுதல் போன்றவற்றுக்கான சர்வதேச விலைமுறி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழு குறித்த ஒப்பந்தத்தை சைனா மெஷினரி இன்ஜினியரிங்க் கோபரேஷன் இற்கு வழங்குவதற்குப் பரிந்துரைத்துள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 6. 2022.02.15 தொடக்கம் 2022.10.14 வரையான எட்டு மாதங்களுக்கான 1.8 மில்லியன் பெற்றோல் (92 Unl) பீப்பாய்களை இறக்குமதி செய்தல்2022.02.15 தொடக்கம் 2022.10.14 வரையான எட்டு மாதங்களுக்கான 1.8 மில்லியன் பெற்றோல் (92 Unl) பீப்பாய்களை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து விலைமுறி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த நீண்டகால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் M/s OQ Trading Limited இற்கு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொடர்பான செய்திகள்: உள்ளூர் உற்பத்தி மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதிETF, EPF இற்கு மிகைவரி கிடையாது; அமைச்சரவைக்கு நிதியமைச்சர் விளக்கம் lead Tags: அமைச்சரவை முடிவுஅமைச்சரவை அனுமதிஅமைச்சரவை தீர்மானம்அமைச்சரவைவீசா காலாவதிகால எல்லை நீடிப்புஉரம்பசளைஉக்ரைன் மோதல்உக்ரைன்ரஷ்யாநெல்நஷ்டஈடுCabinet DecisionCabinet ApprovalVisaFertilizerUkraineRussiaPaddyCompensationUkraine CrisisSend Push Notification: No Share

2024 இல் கண்டி அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

March 1, 2022 - 11:28amஉள்நாடு90 வீதமான காணி சுவீகரிப்பு நிறைவு கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என  ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். னந்தாராம  விகாராதிபதி தெனிகே  சிறினிவாச ஆனந்த தேரருக்கு தர்மகீர்த்தி கௌரவ நாமத்துடன் சன்னஸ்கோரள மகாதிசா உபபிரதான பீடாதிபதியாக நியமிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 2014நவம்பரில் குருநாகல் தம்புள்ளை கலகெதரவில் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி   நாட்டினார் . இதற்கான  அனைத்து ஒப்பந்தங்களையும் வழங்கியதுடன் அவர் தோல்வியடைந்ததையடுத்துவுன்  அவை ரத்துச் செய்யப்பட்டன. அதை ரத்து செய்யாமல் இருந்திருந்தால் 2018இல் கடந்த  அரசினாலேயே இதனை   திறந்து வைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் பழிவாங்கல் செய்ததால்  அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.  2017ஆம் ஆண்டு கடவத்தை முதல் மீரிகம வரையும் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையும் 1, 2என இரண்டு பிரிவுகளை  கடந்த அரசு ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் கடவத்தையில் இருந்து மீரிகம  வரையான நிர்மாணப் பணிகளை முதலாவதாக வழங்கியது. எமது அரசு ஆட்சிக்கு ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டளவில் 36பில்லியன் ரூபாவை   60நாட்களுக்குள்  வழங்கினார்.    என்னால் முடிந்தவரை விரைவாக இதைச் செய்ய நான் கடுமையாக உழைக்கிறேன்.   இந்த நெடுஞ்சாலை விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் குறிப்பிட்ட நாளில்  நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம்  உத்தரவிட்டது.  அதனால்   40கி.மீ., தூரத்தை  நிறைவு செய்து அதனை  திறக்க முடிந்தது. பிரதமரின் தலைமையில் பொதுஹெர தொடக்கம் ரம்புக்கனை வரை நெடுஞ்சாலைத் திணைக்களத்தின் ஊடாக நேரடி ஒப்பந்தங்களை வழங்கி  பணிகளை ஆரம்பித்தோம். இப்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் திருடுவதாக  பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. மீதி இருபது கிலோமீட்டர்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என நம்புகிறேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்தரவின் பேரில் கண்டிக்கான நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணிகள்  2024ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக இதை செய்து முடிப்போம். நிச்சயமாக நாங்கள் அதை  செய்வோம். கோவிட் கோவிட் என்று கூறி நாங்கள் எந்த  அபிவிருத்தி  செயல்பாடுகளை  நிறுத்தவில்லை 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உத்தரவின்படி,  இந்த அதிவேகப் பாதையை நிறைவு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொண்ணூறு சதவீத  காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  அவற்றுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் பத்து சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் முடிவடையும் என்றார். Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 1, 2022 - 6:00amஉள்நாடுஜனாதிபதி அக்கறையாக உள்ளதாக டக்‌ளஸ் தெரிவிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றங்கள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய கடற்றொழிலாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியினாலும், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளாலும் மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிகளினால் கடற்றொழில் செயற்பாடுகள் பாதிப்படையக் கூடாது என்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனமாக உள்ளார். இந்த நெருக்கடிகளில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.       Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

நான்காவது டோஸ் குறித்து இன்னமும் தீர்மானமில்லை

March 1, 2022 - 6:00amஉள்நாடுமூன்றாவது டோஸ் நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும் இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால் 3 ஆவது டோஸ் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் செயல்முறை விரைவுபடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். பூஸ்டர் டோஸிற்கான கொள்முதல் உத்தரவை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறதா என வினவிய போது, அதிக ஆபத்துள்ள குழுவின் கீழ்வரும் அனைத்து இலங்கையர்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவதே அரசாங்கத்தின் இப்போதைய இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். தொற்று நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் மரணமடைவதையும் தடுக்கும் ஒரே வழி இலங்கையர்களிடையே பூஸ்டர் டோஸ் அல்லது 3ஆவது டோஸ் கொண்ட மெதுவான முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்தார். முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 168,96,733 பேரில் 71,39,133 கொவிட் 19 நோயாளிகளுக்கு மாத்திரமே பூஸ்டர் டோஸ் மூலம் தடுப்பூசி வழங்கப்பட்டது. அது திருப்திகரமாக இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றாத மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரமான வைரஸ் தொற்றுக்கு எதிராக தங்கள் அமைப்பை அமைக்க 3 வது டோஸ் அவசியம் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்னும் நான்காவது டோஸை பரிந்துரைக்க உள்ள போதிலும், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். “30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும் சரியான நேரத்தில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களைப் பெற்றால், எதிர்வரும் மாதங்களில் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

விசேட ஜனாதிபதி விசாரணை ஆ.கு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

March 1, 2022 - 6:00amஉள்நாடுராஜித, பொன்சேகா, ரஞ்சனிடம் நேற்று வாக்குமூலம் பதிவு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இரண்டாவது மாடியில் மேற்படி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நேற்று முற்பகல் முதல் ஆரம்பமாகின. நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்கியிருந்தனர். அதை வேளை தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் சிறைச்சாலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மேற்படி ஆணைக்குழுவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டிருந்தார். அதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித்த ஜயசுந்தர, மற்றும் என்.கே. இலங்கக்கோன் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரும் நேற்றைய தினம் மேற்படி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஊழலுக்கு எதிரான குழு மற்றும் அதன் செயலகம் மூலம் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து தகவல்களை பெற்றுக்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் பொருத்தமான பரிந்துரைகளை முன் வைப்பதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க ஜயவர்தன,ஹேமா குமுதினி விக்ரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.(ஸ)   லோரன்ஸ் செல்வநாயகம் Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

Popular

Latest in News