Friday, September 20, 2024
28 C
Colombo

உள்நாட்டு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடருந்து சேவைகள் பாதிப்பு?

தொடருந்துகளுக்காக எதிர்வரும் 3 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் தொடருந்து சேவைகளும் பாதிக்கும்...

15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கைது

15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்போது இந்திய பிரஜைகள்...

இன்று நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, காலை 8.30 முதல் 5.30 வரையான காலப்பகுதிக்குள் இந்த மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. தேவையேற்படின், இரவு...

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் 3 மாதங்கள் நீடிப்பு

March 1, 2022 - 11:48amஉள்நாடு'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நேற்றுடன் (28) நிறைவடையும் நிலையில் அதன் பதவிக்காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ளார். நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும்,  நிபுணர்கள் சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் குறித்த ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணி உறுப்பினர்கள் 1. கலகொடஅத்தே ஞானசார தேரர்2. பேராசிரியர்‌ சாந்திநந்தன விஜேசிங்க3. சிரேஷ்ட விரிவுரையாளர் வீரவர்தனலாகே சுமேத மஞ்சுள4. என்‌. ஜி. சுஜீவ பண்டிதரத்ன5. சட்டத்தரணி இரேஷ்‌ செனெவிரத்ன6. சட்டத்தரணி W.B.J.M.R. சஞ்சய மாரம்பே7. ஆர்.ஏ. எரந்த குமார நவரத்ன8. பாணி வேவல9. மெளலவி M.Z.A.S. மொஹொமட்‌ (தலைவர், காலி உலமா சபை)10. கலீல்‌ ரஹூமான்11. அப்துல் அஸீஸ்‌ மொஹமட் நிசார்தீன்‌12. இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன்13. யோகேஸ்வரி பத்குணராஜா14. ஐயம்பிள்ளை தயானந்தராஜா PDF File: http://www.thinakaran.lk/sites/default/files/news/2022/03/01/2269-06_T.pdf தொடர்பான செய்திகள்: நீதி, வெளி விவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களுடன் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி சந்திப்பு“பயங்கரவாத தடைச் சட்ட திருத்தத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை”ஒரு நாடு ஒரு சட்டம் அனைவருக்கும் சமமானதுஇஸ்லாம் பாடப்புத்தகங்கள் மீளப்பெறப்படுவதன் நோக்கம் என்ன?'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் பிரதிநிதிகள் மூவர்‘ஒரே நாடு; ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி நோக்கம் குறித்து ஞானசார தேரர் விளக்கம்'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியை இரத்துச் செய்கஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி lead Tags: ஞானசார தேரர்ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிகால எல்லை நீடிப்புஜனாதிபதி செயலணிஅதி விசேட வர்த்தமானிஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷகலகொடஅத்தேOne Country One Law Presidential Task ForcePresidential Task ForcePeriod ExtendedGnanasara TheraExtraordinary GazettePresident Gotabaya RajapaksaSend Push Notification: No Share

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து திஸ்ஸ விதாரண கவலை

March 1, 2022 - 12:18pmஉள்நாடுTNAக்கு ஆதரவாக கருத்து முன்வைப்பு பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலகட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் யோசனையைக் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்குவேன் எனவும்  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள நிலைமையிலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பது முறையற்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார். Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No Share

Popular

Latest in News