புதிய சுகாதார வழிகாட்டல்கள் கட்டுப்பாடுகள் சில நீக்கம்
March 2, 2022 - 6:00amஉள்நாடுரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் - ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்து பெலாரஸ் படைகள் தாக்குவதாக உக்ரைன் பாராளுமன்ற அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேற்று 06ஆவது நாளாக தொடர்ந்து வருவதுடன், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.
ஏற்கனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷ்ய இராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷ்யப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றன.
இதேவேளை ரஷ்யத் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாட்டின் படைகள் உக்ரைனின் வடக்குப் பகுதி வழியாக நுழைந்தே தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் உக்ரைன் மீதான போர் தொடருமென ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி நேற்று வெளியிட்ட செய்தியில்,
உக்ரைன் மீதான தாக்குதலிலிருந்து ரஷ்ய இராணுவம் பின்வாங்கப் போவதில்லை. மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலிலிருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும். மேலும், ஐரோப்பாவிலிருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் மீது ரஷிய இராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருவதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய இராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளிக்கிடையே நேற்றுமுன்தினம் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் நேற்று ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைனுக்குள் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No
Share
கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
March 2, 2022 - 6:00amஉள்நாடுகிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் (28) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த வீதியின் அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்
நேற்று முன்தினம்(28-) பிற்பகல் சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் சடலத்தை பார்வையிட்ட பின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரத்தை சேர்ந்த கந்தையா நவ சீலன் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் தொழில் நிமித்தம் சம்பவிடத்திற்கு அருகில் உள்ள மரக்காலை ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும் அறியமுடிகின்றது. கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.-
(பரந்தன் குறூப் நிருபர்)
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No
Share
இன்றைய தினகரன் e-Paper: மார்ச் 02, 2022
March 2, 2022 - 12:00amஉள்நாடுதரவிறக்கம் செய்ய: கிளிக் செய்க
PDF File: http://www.thinakaran.lk/sites/default/files/news/2022/03/01/Thinakaran-e-Paper-01-03-2022.pdf
தொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: பெப்ரவரி 28, 2022இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: பெப்ரவரி 27, 2022இன்றைய தினகரன் e-Paper: பெப்ரவரி 26, 2022
lead
video
Tags: பத்திரிகை செய்திe-PaperThinakaranSend Push Notification: No
Share
மலையகத்தில் டீசல் தட்டுப்பாடு: பொலிஸ் பாதுகாப்புடன் வாகனங்களுக்கு எண்ணெய்
March 1, 2022 - 5:22pmஉள்நாடுநாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் மலையகத்திலும் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்துக்கிடந்தன.
நுவரெலியா மாவட்டத்தில் டீசல் தட்டுப்பாட்டினையடுத்து வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் எண்ணெய் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட டீசல் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில எண்ணெய் நிரப்பு நிலையங்களில் சில கிலோமீற்றர் தூரம் வரை வாகன வரிசை காணப்பட்டதுடன் எரிபொருளின்றி இடையில் நின்ற வாகனங்களுக்கு டீசல் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்றனர்.
ஒரு சில எண்ணெய் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடித்து பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால பொலிஸார் வரவழைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் டீசல் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இதேநேரம் நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த பல வாகனங்கள் டீசல் இன்றி வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்றையதினம் அதிகமான எண்ணெய் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்ற சுலோக அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஹற்றன் விசேட நிருபர்
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: No
Share
நீரில் மூழ்கி இரு அக்கரைப்பற்று இளைஞர்கள் பலி
March 1, 2022 - 4:48pmஉள்நாடுவெல்லவாய எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இன்று (01) முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று (01) முற்பகல் வெல்லவாய, எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மாணவர்கள் சிலரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் புத்தல பிரதேச உயிர்காப்புக் குழுவினரின் உதவியுடன் வெல்லவாய பொலிஸார் இவர்கள் இருவரினதும் சடலங்களை இன்று பிற்பகல் மீட்டுள்ளனர்.
இவ்வருடம் க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதிய 21 வயதான அப்துல் லெத்தீப் அயாஸ் (21) மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 22 வயதான அமீன் ரிபாத் ஆகிய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
lead
Tags: மூழ்கி மரணம்பலிஅக்கரைப்பற்றுஎல்லேவல நீர் வீழ்ச்சிDrownDeadAkkaraipattuEllewala WaterfallSend Push Notification: No
Share
Popular