சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது
படகுமூலம் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் மன்னார் கடல்பரப்பில் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 12 பேரும், திருகோணமலையில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்களில், 5 சிறுவர்களும்...
மருந்து பெற்றுக் கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகளை அறிவிக்க விசேட எண்
பொதுமக்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால், அதுதொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சுகாதார அமைச்சின் 1999 என்ற...
அரிசியின் விற்பனை விலையை விட உச்சப்ட்ச விலை அதிகம்
அரிசிக்காக நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை, தற்போது சந்தையில் அரிசி விற்பனையாகும் விலையை விடவும் அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லின் தற்போதைய விலையை கருதிற்கொண்டு வர்த்தக அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைய, இந்த...
குடிவரவு – குடியகல்வு திணைக்கள பணிகள் வழமைக்கு
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன.
எனினும் தற்போது அது சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (04) அதன் பணிகள் வழமைப் போன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றுக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியத்த உயன நடைபாதையை தடுத்து இரும்பு வேலி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் இன்றைய தினம் விசேட திட்டமொன்று அமுலாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Popular