இன்றிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ரணில் ராஜபக்ஷ என்ற பெயரால் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான ஐக்கிய பெண்கள் சக்தியினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க வேண்டிய இந்த பொலிஸார் 73 வயதான இந்த நபரை பாதுகாக்கின்றனர். நாம் அந்த மனிதரை இன்று முதல் ரணில் விக்ரமசிங்க என்று அழைக்காது ரணில் ராஜபக்ஷ என்று அழைக்க வேண்டும் என தெரிவித்தார்.