முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
21வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு SLPPயிலிருந்து 21 பேர் ஆதரவாக வாக்களிப்பார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் திருத்தத்திற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளது.
ஆனால் கட்சி அதிகாரமற்ற பிரதமருக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.