தென்கொரிய நாடு திவாலான போது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக அந்நாட்டு மக்கள் தமது தங்கத்தை மத்திய வங்கிக்கு வழங்கியதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு வலுவான நம்பிக்கை இருப்பதாகவும், இந்தியாவில் 1991-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது 2 பில்லியன் டொலர் மட்டுமே கையிருப்பில் இருந்ததாகவும்,ஆனால் இன்று அவர்களின் கையிருப்பு 600 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.