மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (30) இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி? நாட்டிற்காக அந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும்இ நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தனது விருப்பத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து அவரை பிரதமராக நியமித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.