52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பை தோற்கடிக்க 71 முறை பிரதமர் பதவியை நிராகரித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்று ராஜபக்ஷக்களின் மெய்ப்பாதுகாவலராக மாறுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கொள்கைகளுக்கு அமைவாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நல்லாட்சியை வழங்குவதற்காக அரசியலமைப்பின் 19ஆவது சரத்தை மீள அமுல்படுத்துவதற்கு தாம் தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.