அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்தை விட செலவு இரண்டு மூன்று மடங்கு அதிகம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 4 பில்லியன் ரூபாவாகவும், 9.6 பில்லியன் ரூபா செலவீனமாகவும் இருந்ததால், நாளாந்த செலவினங்களில் 5.6 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“புள்ளிவிவரப்படி, அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு 400 கோடி ரூபா வருமானமாக கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 1000 கோடி ரூபா செலவாகிறது. வருமானத்தை விட 2.4 மடங்கு செலவாகிறது. செலவு செய்வதற்கு அவ்வளவு பணம் இல்லை. இந்நிலையில் ஏனைய நாடுகளிடம் இருந்து வாங்கி கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன”