Tuesday, September 17, 2024
29 C
Colombo
ஏனையவைஜனாதிபதி தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு

ஜனாதிபதி தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு

ஜனாதிபதித் தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கான பணத்தை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள், வாக்குப் பெட்டிகள் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் பணத்தை விடுவிக்க திறைசேரி தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மதிப்பிடப்பட்ட செலவு அதிகரித்தால், அது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles