தேர்தலுக்காக பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை நடத்துவதற்கு வழங்கிய ஆதரவிற்கு ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க தயார் என எதிர்க்கட்சிகள் கூறினாலும், ஜனாதிபதி தேர்தலை கண்டிப்பாக நடத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமது அரசாங்கம் உழைத்து நாட்டுக்கு காட்டியுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட ஏனைய குழுக்கள் இன்னமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.