அமைச்சுப் பதவிகளை ஏற்பது கட்சியின் தீர்மானத்திற்கு எதிரானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்று (20) காலை அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.