புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் அறிவித்துள்ளார்.
இன்று (19) நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், அமைச்சர்களுக்கு வழமையாக கொடுக்கப்படுகின்ற சில சலுகை கொடுப்பனவுகள் துண்டிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை தாம் எடுத்திருப்பதாகவும் இதற்கு புதிய அமைச்சர்கள் இணங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.