Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி இரு அக்கரைப்பற்று இளைஞர்கள் பலி

நீரில் மூழ்கி இரு அக்கரைப்பற்று இளைஞர்கள் பலி

March 1, 2022 – 4:48pm

வெல்லவாய எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (01) முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று (01) முற்பகல் வெல்லவாய, எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மாணவர்கள் சிலரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் புத்தல பிரதேச உயிர்காப்புக் குழுவினரின் உதவியுடன் வெல்லவாய பொலிஸார் இவர்கள் இருவரினதும் சடலங்களை இன்று பிற்பகல் மீட்டுள்ளனர்.

இவ்வருடம் க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதிய 21 வயதான அப்துல் லெத்தீப் அயாஸ் (21) மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 22 வயதான அமீன் ரிபாத்  ஆகிய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Send Push Notification: 



<!——>








தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles