பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியதை அடுத்து, பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ரோஹிணி கவிரத்னவின் பெயரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி அஜித் ராஜபக்ஷவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.
இருவரின் பெயரும் நாடாமன்றில் முன்மொழியப்பட்டதுடன், இரகசிய வாக்கெடுப்பும் நடைபெற்றது.
இதில் அஜித் ராஜபக்ஷ 119 வாக்குகளை பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.