வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்க்கப்பட்டது.
கைவிடப்பட்ட கற்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில நாட்களுக்கு முன்னதாகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டிருந்தார்.
மேலும் அவர் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டதுடன் அக்கிராமத்தை சேர்ந்த 69 வயதான அருணாசலம் சிவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.