யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மீசாலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்