பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து உண்மையான வெளிப்பாட்டை வெளியிட எதிர்பார்ப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு தாம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும் அதற்கான காரணங்களை வெளிப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.