Saturday, September 21, 2024
28 C
Colombo
அரசியல்வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாமல் கவலை

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாமல் கவலை

அண்மைய சம்பவங்களில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“இந்த துயரமான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குறிப்பாக மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன், இதுவரை நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து வருத்தமடைகிறேன். வன்முறையை தடுத்து நாட்டில் அமைதியான சூழலை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles