எதிர்வரும் ஒருவாரத்துக்குள் புதிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கான விசேட உரையொன்றை அவர் நேற்று நிகழ்த்தினார்.
அதில் அவர் கூறிய விடயங்கள் சில பின்வருமாறு:
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையும், மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையும் கொண்ட ஒருவர் பிரதமராகவும், அமைச்சரவை அமைச்சர்களாகவும் நியமிக்கப்படுவர்.
புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிறைவேற்று அதிகார முறைமையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரத்தை பகிரும் வகையில், 19ம் திருத்தச் சட்டத்தின் உட்கிடக்கைகளை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்படும்.
இந்த பணிகளை மேற்கொள்ள எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்