Tuesday, May 27, 2025
29 C
Colombo
அரசியல்அப்பா பாதுகாப்பாக உள்ளார் - நாமல்

அப்பா பாதுகாப்பாக உள்ளார் – நாமல்

மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.

அவர் இன்று அதிகாலை அலரி மாளிகையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நாட்டை விட்டு வெளியேற தயாராக வருவதாக செய்திகள் வெளியானது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“நாம் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக பல வதந்திகள் பரவி வருகிறது. நாம் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்.

அத்துடன், எனது தந்தை மிக பாதுகாப்பாக உள்ளார். அவர் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles