Monday, March 16, 2026
31.7 C
Colombo
வடக்குபுகையிரத கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்த்தர் பலி

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்த்தர் பலி

பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பத்தர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் பிற்பகல் நேற்று 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில் பாதுகாப்பான மோட்டார் சைக்கிளில் குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே புகையிரதம் மோதியுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த
44 வயதுடைய சிவராசமுத்தையா சசிவதனன் எனும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles