நாட்டின் அடுத்த பிரதமர் மற்றும் அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதியின் இணக்கப்பாட்டினை ஓமல்பே சோபித தேரர் வெளியிட்டுள்ளார்.
சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் கூறினார்.
அதன்படி கட்சி சாரா பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.