Tuesday, June 23, 2026
28.4 C
Colombo
வடக்குமின்சாரம் தாக்கி இளைஞன் பலி

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் எல்லைக்குட்பட்ட வரணி ஈற்றாலே பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் மின்சார அமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி, உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles