Thursday, September 19, 2024
28 C
Colombo
மலையகம்இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு

இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு.

நேற்று சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டு இருந்த வேலையில் வைத்தியரின் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை உள்ளதை கண்டு தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தனர்.
தோட்ட முகாமையாளர் இது குறித்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தையை எடுத்து சென்று உள்ளனர்.

Keep exploring...

Related Articles