பிரதி சபாநாயகர் தெரிவு விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில் மீது, TNA MP சாணக்கியன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, சாணக்கியன் தமது வீட்டை சுற்றிவளைக்க அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாகவும் குற்றம் சுமத்தினர்.
நாடாளுமன்றில் உரையாற்றிய ரணில் தெரிவித்த சில கருத்துகள்.
மஹிந்தவையும் என்னையும் இணைத்து பேசவேண்டாம் – நான் அவர்களை என்றும் ஆதரித்தது கிடையாது.
சாணக்கியன் 2013இல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளராக மஹிந்தவால் நியமிக்கப்பட்டார்.
சாணக்கியனுக்கு, மஹிந்த சரணம் கச்சாமிஇ பசில் சரணம் கச்சாமி என கூவி பழக்கம் இருக்கலாம்.
என்னை தோற்கடிக்க 2005இல் விடுதலைப் புலிகளுடன் மஹிந்த ஒப்பந்தம் செய்தார்.
எனது வீட்டை சுற்றிவளைக்க சாணக்கியன் உத்தரவிட்டதை அடுத்து, சிலர் எனது வீட்டருகில் நடமாடினர்.
றாடாளுமன்றத்தில் உரையாற்றியமை தொடர்பாக அச்சுறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்க்கட்சி சார்பாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாலேயே ஏனையோரிடம் அவரை ஆதரிக்குமாறு கோரினேன்.