ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் ஜனாதிபதி பாதுகாப்பு படைக்கு உதவியாக பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கிக்கு அருகாமையில் உள்ள காவல்துறை பாதுகாப்பு வளையத்தை உடைத்து ஜனாதிபதி மாளிகைக்குள் பிக்குகளின் நுழைய மேற்கொண்ட முயற்சி உள்ளிட்ட காவல்துறையினரின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.