இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின், பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்கு முன்னர், தனக்கு இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அதற்கு பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி முற்றாக பசில் ராஜபக்ஷவின் அரசியல் வெற்றியென அவரின் ஆதரவாளர்கள் நிலைப்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த 39 பேரை கழித்தாலும் 109 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில் ராஜபக்ஷவுக்கு வெளிக்காட்ட முடிந்துள்ளது.
