யாழ்ப்பாணத்தில், நேற்றைய தினம் இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுந்து வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புன்னாலை கட்டுவான் வடக்கை சேர்ந்த செல்வம் சிவானந்தம் (வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார்.