பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
கடந்த திங்கட்கிழமை(4) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஆலா எனப்படும் முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் ( 39) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் மறுநாள் செவ்வாயக்கிழமை (5) சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.