கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் ரயில் பாதையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் ஒன்று நேற்று (26) இரவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சடலம் சுமார் 05 அடி உயரம் கொண்ட 25 – 30 வயதுடைய நபருடையது என பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணைக்காக சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.