Thursday, July 24, 2025
27.8 C
Colombo
வடக்குயாழ். இளைஞன் மரணம்: பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய உத்தரவு

யாழ். இளைஞன் மரணம்: பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய உத்தரவு

சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இளைஞனுடன் கைதான மற்றைய நபர் அடையாளம் காட்டும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles