பௌத்த மஹா நாயக்கர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகக் கூடும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயாதீன MPகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் புதிய பிரதமர் பதவிக்கு ஒருவரும் பரிந்துரைக்கப்பட மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் மக்கள் மஹிந்தவுக்கே ஆணை வழங்கியிருந்தமையால் பொதுஜன பெரமுன இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.