நாளை (04) ஆட்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்ய சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அவர் நாளை (04) நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்படும் எனவும், புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம் நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தில் 10 அமைச்சர்களை மாத்திரம் நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் விசேட சபையினால் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.