தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கொள்கை ரீதியாக இணங்கி கடந்த வாரம் கட்சித்தலைவர்களுக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.