ஆனையிறவு பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து இளைஞர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
390 கிராம் கஞ்சா அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 21 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (09) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.