திருகோணமலை -கந்தளாய் பிரதேச சபைக்கு உற்பட்ட கந்தளாய் நகரில் சீனியை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கடையின் உரிமையையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக திருகோணமலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
கந்தளாய் பிரதேசத்தில் சீனி அதிகவிலையில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைபாடுகளின் அடிப்படையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் குழு சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
இதன்போது மேற்படி கடையில் அதிக விலையில் சீனி விற்பனை செய்யபட்ட நிலையில் குறித்த கடையின் உரிமையாளர் மீது திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.