கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என குமார வெல்கம எம்.பி தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய பதவி விலகி பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் ஜனாதிபதியின் அனைத்து செலவின மூலங்களும் துண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பிரேரணையிலும் கையொப்பமிடப் போவதில்லை எனவும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.