Friday, September 20, 2024
28 C
Colombo
அரசியல்எங்களை யாராலும் பிரிக்க முடியாது - ஜனாதிபதி

எங்களை யாராலும் பிரிக்க முடியாது – ஜனாதிபதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு எந்த அறிவித்தலையும் தான் வழங்கவில்லை எனவும் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (28) ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது இதனை அவர் தெரிவித்தார்.

“பிரதமரும் நானும் சகோதரர்கள் என்பதால் யாராலும் எங்களை பிரிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தவறான கருத்துகள் பரவுவதை தடுக்க வேண்டும் எனவும், கட்சியை பிளவுபடுத்துவதை தான் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெளிவுபடுத்திய போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மேலும் இரு பின்வரிசை எம்.பிகள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles