Friday, September 20, 2024
31 C
Colombo
வடக்குவடக்கிற்கான ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

வடக்கிற்கான ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

வடக்குக்கான ரயில் நேர அட்டவணையில் நாளை (21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

அனுராதபுரம் முதல் மாகோ வரையான ரயில் தண்டவாளம் புனரமைக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்த ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கல்கிஸை முதல் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் உள்ளடங்களாக அனைத்து வடப் பகுதிக்குமான ரயில் நேர அட்டவணைகள் நாளை முதல் மாற்றப்படவுள்ளன.

இதேவேளை, வடப்பகுதிக்கான ரயில் சேவைகள் அடுத்த மாதம் முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles