Sunday, September 14, 2025
27.8 C
Colombo
வடக்குசட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

சுடலைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்ஞ சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 18,750 லீட்டர் கோடாவும், 80 லீட்டர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles