எம்.பிகளை விலை பேசும் பசில்

நாடாளுமன்றில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அது வெற்றியடையும் வாய்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த திங்கட்கிழமை இரவு ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இடையில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் மஹிந்த ராஜக்ஷவுக்கு ஆதரவாக எம்.பிகளை திரட்டும் வேலைத்திட்டத்தை பசில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here